இலங்கை உலகம்

பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிடும் நாமல் எம்.பி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாடு பிரமாண்டமான முறையில் பெருந்தொகையான மக்கள் பங்களிப்புடன் நடைபெறவுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அனைத்து முற்போக்கு பொது மக்களும் கட்சியை மீண்டும் அடிமட்ட மட்டத்தில் இருந்து கட்டியெழுப்ப வேண்டும் எனவும், அதனை நாட்டின் தேசிய அரசியலில் தீர்க்கமான சக்தியாக மாற்ற வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாடு டிசெம்பர் 15 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாகவும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அடிமட்ட உறுப்பினர்கள் நான்கு திசைகளிலிருந்தும் வரவுள்ளதாக நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content