ஐரோப்பா

நடுக்கடலில் தத்தளித்த புலம்பெயர்ந்தோர் படகு- உதவச் சென்ற பிரான்ஸ் கடற்படைக்கு கிடைத்த அதிர்ச்சி

புலம்பெயர்வோர் படகொன்று நடுக்கடலில் சிக்கித்தவிப்பதை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யச் சென்ற பிரான்ஸ் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, எதிர் பாராத அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்தார்கள் அந்த படகிலிருந்த புலம்பெயர்வோர்.

நடுக்கடலில் சிறு படகொன்று சிக்கித் தவிப்பதாக பிரான்ஸ் கடற்படை கப்பல் ஒன்றிற்கு தகவல் கிடைத்துள்ளது.உடனே பிரான்ஸ் கடற்படையினர் அந்த இடத்திற்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு, ஒரு சிறு படகில் சுமார் 50 புலம்பெயர்வோர் இருந்துள்ளார்கள். அவர்களை மீட்க பிரான்ஸ் கடற்படை முயன்றுள்ளது.

ஆனால், உதவச் சென்ற பிரான்ஸ் கடற்படையினருக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்துள்ளார்கள் அந்த படகிலிருந்தவர்கள். உங்கள் உதவி எங்களுக்குத் தேவையில்லை, எங்களுக்கு பிரித்தானியாவின் உதவிதான் தேவை என்று கூறியுள்ளார்கள் அந்த புலம்பெயர்வோர்.

நடுக்கடலில் நின்ற புலம்பெயர்ந்தோர் படகு: உதவச் சென்ற பிரான்ஸ் தரப்புக்கு கிடைத்த அதிர்ச்சி | Migrant Boat Stuck In The Middle Of The Sea

அதைத் தொடர்ந்து, பிரான்ஸ் கடற்படையினர், Ranger என்னும் பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படை படகைத் தொடர்பு கொண்டு, பிரித்தானிய அதிகாரிகளிடம் விடயத்தைக் கூற, உடனே Ranger அங்கு விரைந்துள்ளது.

புலம்பெயர்வோர் பயணித்த சிறு படகு ஆங்கிலக் கால்வாயின் பிரான்ஸ் பகுதியில் இருந்த நிலையிலும், பிரித்தானிய மீட்புப் படகு வந்து அந்த புலம்பெயர்வோரை மீட்டு பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்ல நேர்ந்துள்ளது.

இந்த தகவலை அறிந்த கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Adam Holloway, இது ஆங்கிலக் கால்வாய் டெக்சி சேவை போல் உள்ளது என்று கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், இப்படி செயல்படுவதை நாம் நிறுத்தியாகவேண்டும் என்று கூறியுள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content