நடவடிக்கைகள் போதுமானதல்ல – பிரிட்டிஷ் யூத பிரதிநிதிகள் சபை வலியுறுத்தல்
பிரித்தானியாவில் யூத-எதிர்ப்பை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதல்ல என பிரிட்டிஷ் யூதர்களின் பிரதிநிதிகள் சபை தெரிவித்துள்ளது.
ஸ்டார்மர் தலைமையில் டவுனிங் ஸ்ட்ரீட்-இல் நடைபெற்ற உச்சிமாநாட்டில் புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்டன.
இதில் பல தொழில்துறை மற்றும் சமூகத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் மாநாட்டுக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையில், யூத சமூகத்திற்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து வருவதால் “மேலும் அவசர நடவடிக்கை தேவை” என பிரதிநிதிகள் சபை வலியுறுத்தியுள்ளது.
சட்டத்தை விரைவாகப் பயன்படுத்தி வெறுப்பைத் தூண்டும் நபர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என்றும் அந்த அமைப்பு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அரசு சில முன்னேற்றங்களை செய்திருந்தாலும், தற்போதைய நிலைமை ஒரு நெருக்கடி நிலையாக கருதப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.





