இலங்கை செய்தி

நிருபமா ராஜபக்ஷவின் செயலாளர் போல் நடித்து பணம் மோசடி செய்த நபர் கைது

முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் செயலாளர் போல் நடித்து வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பணம் மோசடி செய்ய முயற்சித்த நபர் இன்று மாலம்பே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

வீரகட்டிய பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொள்ள முயன்றதாக தெரிவிக்கப்பட்டது.

சந்தேகநபர் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம், நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்பு மேற்கொண்டனர்.

இதன்படி, சந்தேக நபர் வேறு ஒருவரை ஆள்மாறாட்டம் செய்ததற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content