இலங்கை செய்தி

போலி விசாவிற்காக 7,000 யூரோக்கள் செலுத்திய யாழ்ப்பாண நபர்!!! விமான நிலையத்தில் கைது

இலங்கை கடவுச்சீட்டில் பொருத்தப்பட்ட போலி போலந்து வீசாவைப் பெறுவதற்காக 7,000 யூரோவை செலுத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர், நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

திங்கட்கிழமை மாலை கத்தாரின் தோஹா நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 217 இல் பயணிக்கவிருந்தபோது, குறித்த நபர் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பயணியிடம் விசாரித்தபோது, போலி விசாவிற்கு 7 ஆயிரம் யூரோ கொடுத்ததாக கூறியதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

போலி விசாவைப் பெறுவதற்காக ஜெர்மனியில் உள்ள ஒருவருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பயணி ஒருவர் போலியான போலிந்து விசா மூலம் தனது கடவுச்சீட்டை உள்ளூர் முகவரிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.

அவர் தோஹாவுக்கு விமானத்தில் ஏறியதாகவும், பின்னர் போலந்தின் வார்சாவுக்கு இணைக்கும் விமானத்தில் செல்வதாகவும் சந்தேகிக்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பிரிவிடம் சந்தேநகபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை