மத்திய கிழக்கு

ஹமாஸின் பிடியில் இருந்த இஸ்ரேலிய ராணுவ வீரர் படுகொலை…

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவர்களின் பிடியில் உள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், பாலஸ்தீனர்களின் மொத்த உயிரிழப்பு 29,092 ஆக உள்ளது என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது. உயிரிழந்தவர்களில் 3-ல் 2 பங்கு மக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரால், காசாவுக்கு சிறை பிடித்து செல்லப்பட்டவர்களில் இளம் ராணுவ வீரரான ஓஜ் டேனியல் (19) என்பவரும் ஒருவர் ஆவார். பீரங்கி படையில் பணியாற்றிய இவரை, சக பணியாளர்களுடன் சேர்த்து பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர்.

Hamas' armed wing says Israeli soldier held in Gaza killed

இந்த சூழலில், இஸ்ரேல் ராணுவத்தின் 7-வது கவச படையின் 77-வது பட்டாலியனை சேர்ந்தவரான டேனியல், காசாவில் வைத்து கொல்லப்பட்டு விட்டார் என ரகசிய தகவல் அடிப்படையில் இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது. டேனியலுக்கு பெற்றோர் மற்றும் இரட்டை சகோதரிகள் உள்ளனர்.

அவருடைய உடல் காசாவிலேயே உள்ளது. எனினும், ராணுவத்தின் ரபி கூறியதன்பேரில் அவருக்கு இன்று மதியம் 2 மணியளவில் குவார் சபா ராணுவ மயானத்தில் வைத்து இறுதி சடங்குகள் நடைபெறும். ஒரு வார காலம் நடைபெற கூடிய இந்த இரங்கலில் டேனியலின் குடும்பத்தினரும் கலந்து கொள்கின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content