100 துரோகிகளின் சொத்துகளை பறிமுதல் செய்தது ஈரான்!
ஈரான் இஸ்பஹான் மாகாணத்தில் அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கருதப்படும் நபர்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
எதிரி நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டுத் துரோகம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 100 பேரின் சொத்துக்களை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
பல்வேறு வழிகளில் நாட்டின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் இவர்களை அந்தப் பகுதியின் தலைமை நீதிபதி அடையாளம் கண்டு தண்டனை வழங்கியுள்ளார்.
ஈரான் அரச ஊடகமான IRIB இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஈரானின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்குபவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீவிரமான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.





