ஹைட்ரஜன் இயந்திரம் மூலம் மின்சாரத்தை வழங்க முயற்சி!
உலகில் முதல் முறையாக பிரம்மாண்டமான ஹைட்ரஜன் இயந்திரம் மூலம் மின் உற்பத்தியை வழங்கும் முயற்சியில் ஸ்பெயின் ஈடுபட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம், கார்பன் உமிழ்வுகள் இல்லாமல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளைச் சமநிலைப்படுத்த உதவும் என்று உற்பத்தியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பம் பின்லாந்து எரிசக்தி நிறுவனமான வார்ட்சிலாவால் (Wärtsilä) உருவாக்கப்பட்டு, வடக்கு ஸ்பெயினில் உள்ள அதன் ஆலையில் சோதிக்கப்பட்டுள்ளது.
முழுவதுமாக ஹைட்ரஜனில் இயங்கும் இந்த இயந்திரம் , காற்று மற்றும் சூரிய சக்தி போதுமான ஆற்றலை உற்பத்தி செய்யாதபோது மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹைட்ரஜன் எரிபொருள் செல்களைப் போலல்லாமல், இந்த அமைப்பு தூய ஹைட்ரஜனில் இயங்குவதற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் இதனை நடைமுறைக்கு கொண்டுவர பெரும் தடைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹைட்ரஜனைப் பெருமளவில் பயன்படுத்துவதற்கு, உற்பத்தி, சேமிப்பு மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகளில் கணிசமான முதலீடும், வலுவான கொள்கை ஆதரவும் தேவைப்படும் எனவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.




