உலகம் விளையாட்டு

4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோமன் பாவெல் 48 ரன்கள் குவித்தார். நிகோலஸ் பூரன் 41 ரன்கள், பிராண்டன் கிங் 28 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 3 ரன்னிலும், இஷான் கிஷன் 6 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 21 ரன்னில் வெளியேறினார்.

அறிமுக போட்டியில் களமிறங்கிய திலக் வர்மா அதிரடியாக ஆடினார். அவர் 22 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 19 ரன்னும், சஞ்சு சாம்சன் 12 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் மெக்காய், ஹோல்டர், ஷெப்பர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

(Visited 18 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content