ஐரோப்பா கருத்து & பகுப்பாய்வு

மனநல ஆதரவிற்காக AI மென்பொருளை நாடும் இளைஞர்கள் அதிகரிப்பு!

மனநல ஆதரவிற்காக நான்கில் ஒருவர் AI மென்பொருளை பயன்படுத்துவதாக ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.

குறிப்பாக இளம் தலைமுறையினரே இந்த மென்பொருளை பயன்படுத்துவதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

கிட்டத்தட்ட பாதி ஐரோப்பிய இளைஞர்கள் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவிற்காக செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

சுகாதார நிபுணர்களுடன் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதை விட இது தங்களுக்கு எளிதாக இருப்பதாக அவர்கள் கருதுவதாகவும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 11-25 வயதுடையவர்களில் 51 சதவீதம் பேர்  AI மென்பொருளை பயன்படுத்துவதாக  கூறியுள்ளனர்.

தனிப்பட்ட கலந்துரையாடல்களுக்கு நண்பர்களும் பெற்றோருமே முதன்மைத் தேர்வுகளாக உள்ளனர், ஆனால் பதிலளித்தவர்களில் 90 சதவீதம் பேர் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்பில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இளைஞர்களின் மனநலம் குறித்த அதிகரித்து வரும் கவலைகளையும் இந்தக் கணக்கெடுப்பு எடுத்துக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் மனநல ஆதரவிற்காக செயற்கை நுண்ணறிவை மட்டுமே சார்ந்திருப்பதற்கு எதிராக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!