இலங்கை

கலந்துரையாடல்களை நடத்த IMF, இலங்கைக்கு ஆதரவளிக்க தயார்!

சர்வதேச கடனீட்டு பத்திரதாரர்களுடனான (International Bondholders) இலங்கையின் கலந்துரையாடல்களுக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளதாகவும் கொள்கை ரீதியில் தற்காலிக உடன்பாட்டை எட்டிய பின்னர் முறையான மதிப்பீட்டை வழங்குமென்றும், சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாணய நிதியத்தின ஒத்துழைப்புத் திட்டத்தின் அளவுகோல்களுடன் இணக்கமான ஒப்பந்தம் இருக்குமென தாம் நம்புவதாக தெரிவித்த அவர், உத்தியோகபூர்வ கடனாளிகளினது செயற்பாடுகளின்

தேவைகளின் ஒப்பீட்டுத்தன்மை திட்டத்தின் கீழ் இரண்டாவது மதிப்பாய்வை முடிக்க முன்னர் இதனை விரைவில் அடையக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வார தொடக்கத்தில் சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைக்க சர்வதேச கடனீட்டு பத்திரதாரர்களுடன் உடன்பாட்டை எட்டத் தவறியதாக இலங்கை தெரிவித்திருந்தது. ஜூன் மாதத்தில் இலங்கை தனது 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் மூன்றாவது தவணையை பெறுவதில் தாமதம் ஏற்படக்கூடுமென்ற கவலையையும் வெளிப்படுத்தியிருந்தது.

சர்வதேச கடனீட்டு பத்திரதாரர், திட்டத்தின் ‘அடிப்படை அளவுருக்கள்’, அதன் நாணய நிதியத் திட்டத்தின் உள்ளடகத்துடன் பொருந்தவில்லையென்பது முக்கிய முட்டுக்கட்டைகளில் ஒன்றாகுமென அரசாங்கம் தெரிவித்திருந்தது.

“இரு தரப்பினரும் தமது கலந்துரையாடல்களை விரைவாக தொடர நாம் ஊக்குவிக்கிறோம்” என சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content