“நடிக்கமாட்டேன்: படம் திரைக்கு வராது” – ரவி மோகன் உருக்கம்!
மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து கிடைக்கும் வரை தான் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.
இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ இதுவரை காலமும் நான் மௌனம் காத்தேன். ஆனால் அவ்வாறு பேசாமல் இருந்தது தவறு என்பது தற்போது புரிகின்றது.
தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
எனவே, என் குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசினாலோ சீண்டினாலோ சும்மா இருக்க மாட்டேன்.
அதேபோல விவாகரத்து கிடைக்கும் வரை நான் நடிக்கப்போவதில்லை. எனது படங்கள் திரைக்கு வராது.
எனது குழந்தைகளை பார்க்க விடமாட்டுகின்றனர்.
அவர்களுக்காக நான் அனைத்தையும் செய்துள்ளேன். ஆகவே, பாசத்தை பற்றி பேச வரக்கூடாது.” – எனவும் ரவி மோகன் குறிப்பிட்டுள்ளார்.




