நிகழ்ச்சி நிரல் குறித்து எனக்குத் தெரியாது – எஸ்.எம். சந்திரசேன

இன்று மதியம் நடைபெறவுள்ள அனைத்துக்கட்சிகள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறியவில்லை என SLPP இன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஓர் அரசியல் கட்சியாக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை அழைத்துள்ளார்.
“நானும் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளேன். ஆனால் நிகழ்ச்சி நிரல் பற்றி எனக்கு சரியாகத் தெரியது” என அவர் தெரிவித்தார்.
அரசியல் கட்சி எனும் வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சந்திப்பில் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான திட்ட முன்மொழிவுகளை ஏற்பதுடன், நாட்டுக்கு பாதகமான முன் மொழிவுகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாங்கள் சுதந்திரமாக முடிவுகளை எடுக்கக்கூடிய அரசியல் கட்சி என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
(Visited 13 times, 1 visits today)