இலங்கை செய்தி

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் – நிதி ஒதுக்கீடு குறித்த விபரம்!

  • November 7, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. 01. 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடனை 87 சதவீதமாக பராமரிக்க நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளகது. 02. வெளிநாட்டு கையிருப்பை இந்த வருட இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற நிலைக்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 03. அரச வருமானம் 16% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 04. அரச ஊழியர்களின் சம்பளத்தை 3 […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் சொந்த வீடு வாங்குவது சாத்தியமா?

  • November 7, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் வீடுகளின் விலை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. இதன்படி கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 299,862 பவுண்ட்ஸாக விலை உயர்வு பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் 0.3 சதவீதம் சரிவை சந்தித்ததை தொடர்ந்து அக்டோபரில் 0.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. வீட்டு விலை வளர்ச்சியின் வருடாந்திர வீதமும் அதிகரித்துள்ளது. இதற்கமைய செப்டம்பரில் 1.3% ஆக இருந்த விலை உயர்வானது ஒக்டோபரில் 1.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள Halifax இன் அடமானத் […]

பொழுதுபோக்கு

“டாக்ஸிக்” குறித்து ருக்மிணி வசந்த் கொடுத்த சூப்பர் அப்டேட்

  • November 7, 2025
  • 0 Comments

கே.ஜி.எப் என்ற படத்தின் மூலம் உலகளவில் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தவர்தான் யாஷ். யாஷ் நடிக்கும் அடுத்த படம் தான் டாக்ஸிக். இப்படத்தில் யாஷ் உடன் நயன்தாரா, ஹூமா குரேஷி உட்பட பலர் நடிக்கின்றனர். இதேவேளை, Ace, மதராஸி மற்றும் காந்தாரா சாப்டர் 1 ஆகிய படங்களில் நடித்த ருக்மிணி வசந்த் டாக்ஸிக் படத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடி வந்த ருக்மிணி வசந்த் டாக்ஸிக் படம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது […]

இலங்கை செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படாது – ஜனாதிபதி அறிவிப்பு!

  • November 7, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரங்கள்  எதிர்காலத்தில் வழங்கப்படாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடாது என்று தான் கருதுவதாக ஜனாதிபதி கூறினார். இருப்பினும், அரசாங்கத்தின் தற்போதைய வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் போதுமானதாக இல்லை என்றும், தற்போதுள்ள வாகனங்கள் மற்றும் இயந்திரங்களில் கணிசமான பகுதி காலாவதியானவை என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி  பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்கு கணிசமான செலவுகள் ஏற்படுவதாகவும் கூறினார். இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசு நிறுவனங்களுக்குத் […]

இந்தியா செய்தி

டெல்லி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு – பல விமானங்கள் தாமதம்!

  • November 7, 2025
  • 0 Comments

டெல்லி விமான நிலையத்தில் இன்று 200க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு செய்தியிடல் அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் விளைவாக விமான தாமதங்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விமான  புறப்பாடுகள் 30 நிமிடங்கள் தாதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய விமான நிலையங்களிலும் இதன் தாக்கம் எதிரொலித்ததாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. விமானச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, இண்டிகோ  (IndiGo) விமான நிறுவனத்தின் பங்குகள் 1.5 சதவீதம் சரிந்தன. ஸ்பைஸ்ஜெட் […]

உலகம்

8.5 டிரில்லியன் டொலர் இலக்கு – எலோன் மஸ்க்கை வரலாறு காணாத டிரில்லியனராக மாற்றும் டெஸ்லா!

  • November 7, 2025
  • 0 Comments

டெஸ்லா (Tesla) நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் (Elon Musk) ஊதியத்தை கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டொலருக்கு உயர்த்த டெஸ்லா பங்குதாரர்கள் இணங்கியுள்ளனர். இதன் மூலம், மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக மாறுவதற்கான பாதையில் உறுதியாக அடியெடுத்து வைத்துள்ளார். அதற்கமைய, அடுத்த 10 ஆண்டுகளில் அவர் அந்த ஊதியத்தை பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரலாற்றில் மிக அதிக ஊதியம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் இருப்பார் என குறிப்பிடப்படுகின்றது. உடன்பாட்டிற்கமைய, அவருக்கு […]

இலங்கை

கடமை நேரத்தில் கண்ணயர்ந்து தூங்கிய அர்ச்சுனா! ஜனாதிபதி தாலாட்டு பாடினாராம்!!

  • November 7, 2025
  • 0 Comments

நாடாளுமன்றத்தில் இன்று அர்ச்சுனா எம்.பி. கதிரையில் இருந்தவாறு தூங்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இது தொடர்பில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவருவதை காணமுடிகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று சபையில் முன்வைக்கப்பட்டது. அதிலுள்ள முன்மொழிவுகளை ஜனாதிபதி வெளியிட்டுவருகின்றார். ஆளும் மற்றும் எதிரணியை சேர்ந்த எம்.பிக்கள் சபையில் இருந்தவாறு அவற்றை செவிமடுத்துவருகின்றனர். எதிரணி வரிசையில் அர்ச்சுனா எம்.பியும் அமர்ந்திருந்தார். ஜனாதிபதியின் உரை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அவர் […]

பொழுதுபோக்கு

பொது இடத்தில் ‘அநாகரிக’ கேள்வி கேட்ட நிரூபர்! நடிகையின் செருப்படி பதில்

  • November 7, 2025
  • 0 Comments

மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் ‘அதர்ஸ்’ இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நிரூபர் ஒருவர் ‘உங்கள் எடை என்ன?’ என்று அநாகரிகமான முறையில் நடிகை கவுரி கிஷனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். இதன்போது கவுரி கிஷனுக்கும் அந்த நிருபருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு பதிலளித்த […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் விமானப்படை தளத்திற்கு அனுப்பப்பட்ட மர்ம பொட்டலம்! பலர் வைத்தியசாலையில்!

  • November 7, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் விமானப்படை தளத்திற்கு சந்தேகத்திற்கிடமான பொட்டலம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதனை திறந்து பார்த்த சில ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொட்டலத்தில் அடையாளம் தெரியாத வெள்ளைப் நிற பொடி இருந்ததாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பயன்படுத்தும் விமானம், மற்றும் அதன் துணைக் கப்பல்கள் விமான தளத்தில் உள்ளன. மேலும் ஜனாதிபதி வழக்கமாக பயணங்களுக்கு புறப்படும் இடமும் இதுதான் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சம்பவம் […]

இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலைவழக்கு – குற்றக்கும்பல்களை சேர்ந்த 09 பேருக்கு தொடர்பு!

  • November 7, 2025
  • 0 Comments

நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களை சேர்ந்த 09 பேர் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு இன்று (7) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது. அவர்களில் நால்வர் தற்போது வெளிநாட்டுகளுக்கு  தப்பிச்சென்றுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொலையில் ஆறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​இந்த […]

error: Content is protected !!