பொழுதுபோக்கு

காதலை உறுதிப்படுத்திய சமந்தா!

  • November 8, 2025
  • 0 Comments

நடிகை சமந்தா நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்த பின் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்து வருகின்றார்.. ஆனால் கடந்த சில காலமாக சமந்தாவைச் சுற்றி ஒரு சலசலப்பு வந்துகொண்டு இருக்கின்றது. அதாவது, பாலிவுட் இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இருவரும் டேட்டிங் செய்வதாகவும், காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவின. ஆனால், இருவரும் இதுவரை இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், சமந்தா ராஜ் நிடிமோருவுடன் நெருக்கமாக இருக்கும் […]

இலங்கை

கடந்த காலத்தின் தொடர்ச்சியே இன்றைய வரவு செலவு திட்டம்!!

  • November 8, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அளவுருக்களுடன் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக முன்னாள் வெளியுறவு மற்றும் நிதி அமைச்சர் அலி சப்ரி பாராட்டியுள்ளார். வரவு செலவு திட்டம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகம் பொதுமக்களின் கோபத்தை எதிர்கொண்டு சில எடுக்கத் துணிந்த முடிவுகளை எடுத்ததாகவும்,  ஆனால் அந்த முடிவுகளே தேசத்தை திவால்நிலையிலிருந்து காப்பாற்றியதாகவும் கூறினார். ஜனாதிபதி […]

அரசியல் இலங்கை

வரவு செலவு திட்டம்!! மகிந்த தரப்பு கடும் எதிர்ப்பு

  • November 8, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் நிதியாண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு- செலவுத் திட்டத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. ” மக்களை ஏமாற்றும் விதத்திலேயே வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ” குறுகிய காலப்பகுதிக்குள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் வரவு- செலவுத் […]

அரசியல் இலங்கை

சஜித்தின் செயற்பாடு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அதிருப்தி

  • November 8, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது இந்திய விஜயத்தின்போது ஓரிரு எதிரணி எம்.பிக்களையேனும் தம்முடன் அழைத்து செல்லாமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில் கட்சி தலைமைமீது அவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர் என்று சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு உத்தியோகப்பூர்வ – முக்கியத்துவமிக்க வெளிநாட்டு பயணங்களின்போது எதிரணி சார்பில் வெளிவிவகாரம் மற்றும் பொருளாதாரம் என்பவற்றை கையாளும் நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது அழைத்து சென்றிருக்கலாம் என்பதே அவர்களின் வாதமாக […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

பாதீட்டு பற்றாக்குறை 1,757 பில்லியன் ரூபா!

  • November 8, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வரி, மானியங்கள் உள்ளடங்களாக மொத்த வருமானமாக 5,300 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. மீண்டெழும் செலவீனம், வட்டி உட்பட மொத்த செலவீனமாக 7,057 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய 1,757 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது மொத்த தேசிய உற்பத்தியில் 5.1 சதவீதமாக இருக்கும். அடுத்த வருடம் 4 – 5 சதவீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அரச வருமானம் மொத்த தேசிய […]

உலகம்

கனடாவில் உயர்ந்தது உணவு பொருட்களின் விலை – காரணம் வெளியிட்ட நிபுணர்கள்

  • November 8, 2025
  • 0 Comments

கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்து வருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. செப்டம்பரில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 4.0 சதவீதம் அதிகமாக இருந்தன. மோசமான வானிலை, வரிகள் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோப்பி (Coffee) விலையும் 41.0 சதவீதத்தால் அதிகரித்தது. ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. உதாரணமாக, மாட்டு இறைச்சி விலை 17.4 சதவீதத்தால் உயர்ந்தது. கொட்டைகள் (nuts) விலைகள், 15.7 சதவீதம் உயர்ந்தது. கனடா மற்றும் […]

அரசியல் இலங்கை

மாகாண சபை தேர்தல் தொடர்பில் எதிர்க்கட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

  • November 8, 2025
  • 0 Comments

மாகாண சபை தேர்தலை நடத்தும் விதம் பற்றி ஆராய்ந்து இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம், எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது. இது தொடர்பில் பிரதமருக்கு இன்று அல்லது நாளை எழுத்துமூலம் தெரியப்படுத்தப்படவுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு- செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், எந்த முறைமையின்கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் […]

உலகம்

சீனாவில் பாம்பாக மாறிய பெண்ணால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி

  • November 8, 2025
  • 0 Comments

சீனாவில் பாரம்பரிய மருந்தினை பயன்படுத்தி பெண் ஒருவர் பாம்பு போன்று மாறியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜியாங்சு மாநிலத்தின் நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான டிங்டிங் (Tingting) என்ற பெண்ணே இவ்வாறு மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் பயன்படுத்திய மருந்தினால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக அவரது உடல் ஊதா-சிவப்பு நிறத்தில், பாம்பின் தோல் வடிவத்திலான வடுக்களாக மாறியுள்ளது. இந்நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது […]

உலகம்

அமெரிக்காவில் H-1B விசா நடைமுறையில் இறுக்கம்! வெளிநாட்டவர்களை அழைக்க தயங்கும் நிறுவனங்கள்

  • November 8, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் கடுமையாகியுள்ள விசா கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாட்டவர்களைப் பணிக்கு அமர்த்த பல நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாகத் தெரிய வந்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் இறுக்கமான H-1B விசா கொள்கைகளால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கில், H-1B விசாவுக்கான அனுசரணை (Sponsorship) கட்டணத்தை அரசாங்கம் சுமார் 100,000 டொலராக அதிகரித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு காரணமாக, இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்களைப் பணிக்கு அமர்த்துவதை அமெரிக்க நிறுவனங்கள் கணிசமாகக் குறைத்துள்ளன. இதன் விளைவாக, […]

உலகம்

இருட்டுச் சந்தையில் சிங்கப்பூர் கடன் அட்டைகள் – வெளியான அதிர்ச்சித் தகவல்!

  • November 8, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடிகள் தீவிரம் அடைந்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூரில்தான் கடன் அட்டைகள் அதிக அளவில் திருடப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. மின்னிலக்கப் பரிவர்த்தனைகளை அதிகம் சார்ந்துள்ள சிங்கப்பூரின் பொருளாதார நிலைக்கு இது பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்தத் தகவலை, VPN சேவைகளை வழங்கும் நொர்ட்விபிஎன் (NordVPN) நிறுவனத்தின் ஆய்வாளர் குழுவான நொர்ட்ஸ்டெல்லார் (NordStellar) தெரிவித்துள்ளது. இவ்வாறு திருடப்படும் கடன் அட்டைகள் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லித்துவேனியாவைத் தலைமையிடமாகக் […]

error: Content is protected !!