வெப்பமான வானிலை தொடர்பில் 19 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை
வெப்பமான வானிலை தொடர்பில் நாளைய தினம் 19 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, மேல், வடமேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகல மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் பல பகுதிகளில் ஆபத்தான நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மக்கள் வெளிப்புறச் செயற்பாடுகளை தவிர்த்து அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். […]













