இலங்கை செய்தி

வெப்பமான வானிலை தொடர்பில் 19 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை

  • April 14, 2026
  • 0 Comments

வெப்பமான வானிலை தொடர்பில் நாளைய தினம் 19 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, மேல், வடமேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகல மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் பல பகுதிகளில் ஆபத்தான நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மக்கள் வெளிப்புறச் செயற்பாடுகளை தவிர்த்து அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். […]

உலகம் செய்தி

காசா அமைதி முயற்சி தடம் புரளுமா?  ஹமாஸ் ஆயுதக் குறைப்புத் திட்டம் நிராகரிப்பு 

  • April 14, 2026
  • 0 Comments

அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த காசா அமைதி முயற்சியில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது. காசாவில் ஆயுதக் குறைப்பை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக, பேச்சுவார்த்தைகளில் நன்கு அறிந்த ஒரு மூத்த பலஸ்தீனிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தலைமையிலான அமைதி முயற்சியில் காசாவின் உயர் பிரதிநிதியாக செயல்படும் நிக்கோலாய் மிலாடெனோவ், இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஒக்டோபரில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டமாக […]

செய்தி தமிழ்நாடு

சட்ட விரோத மீன்பிடி – தமிழக மீனவர்கள் நால்வருக்கு விளக்கமறியல்

  • April 14, 2026
  • 0 Comments

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன. இராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரம் மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று செவ்வாய்கிமை அதிகாலை மன்னார் மாவட்ட கடற்பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நபர் ஒருவருக்கு சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் படகிலிருந்த 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக […]

இலங்கை செய்தி

புத்தாண்டு காலத்தில் அதிவேக வீதிகள் மூலம் 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

  • April 14, 2026
  • 0 Comments

புத்தாண்டை முன்னிட்டு கடந்த 03 நாட்களில் அதிவேக வீதிகள் மூலம் 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் மாத்திரம் அதிவேக வீதிகளில் 4 லட்சத்து 34 ஆயிரத்து 338 வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அநுராத ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதனிடையே, கடந்த 12 ஆம் திகதி மாத்திரம் 45 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளது. இதேவேளை, அதிவேக வீதிகளில் […]

உலகம் செய்தி

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறுத்தியது இத்தாலி!

  • April 14, 2026
  • 0 Comments

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு இத்தாலி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இத்தாலி பிரதமர் இன்று (14) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியான உறவுகள் முடங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தாலியின் இந்த கொள்கை மாற்ற முடிவானது மேற்காசியாவில் நிலவும் பதற்றமான போர் சூழலுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படுகின்றது. 2003 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட மேற்படி பாதுகாப்பு ஒப்பந்தமானது 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டுவருகின்றது. எனினும், இஸ்ரேலின் போர் நடவடிக்கை […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் ராக்கெட் வேகத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு, இறகு போன்றே சரிவு

  • April 14, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தொடர்ந்து 43 நாட்களாக உயர்ந்திருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் தற்போது எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லையென வாகன அமைப்பான RAC தெரிவித்துள்ளது. வளைகுடா பகுதியில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதுடன், மொத்த சந்தைகளிலும் எரிபொருள் விலைகள் சரிவடைந்துள்ளன. ஆனால், முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடும்போது விலைகள் இன்னும் அதிகமாகவே உள்ளன. பெட்ரோல் லீற்றருக்கு சுமார் 158 பென்ஸ் அளவில் விற்பனையாகிறது. டீசல் விலை லீற்றருக்கு சுமார் 192 பென்ஸ் வரை உயர்ந்துள்ளது […]

உலகம் செய்தி

மேற்காசிய போரால் பிரிட்டன் பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு!

  • April 14, 2026
  • 0 Comments

மேற்காசிய போரால் பிரித்தானியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச நாணய நிதியம் International Monetary Fund (IMF) எச்சரிக்கை விடுத்துள்ளது. போர் சூழ்நிலையால் ஏற்பட்ட எரிசக்தி விலை உயர்வானது ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளைவிட பிரித்தானியாவிலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வளர்ச்சி எதிர்பார்ப்பு கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், இந்த போர் உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. குறிப்பாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை அதிகரிக்கும்போது மத்திய […]

உலகம் செய்தி

மந்தநிலையை நோக்கி நகரும் உலக பொருளாதாரம் – IMF கடும் எச்சரிக்கை

  • April 14, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் மோதல் தொடர்ந்தால் உலக பொருளாதாரம் மந்தநிலையை எதிர்கொள்ளும் அபாயம் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF), எச்சரித்துள்ளது. அமைப்பின் உலக பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில், எண்ணெய், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்தால், 2026 ஆம் ஆண்டில் உலக வளர்ச்சி 02 சதவீதத்துக்கும் கீழ் குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 1980 க்குப் பிறகு மிக கடுமையான உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு நெருக்கமான நிலை எனவும் IMF குறிப்பிட்டுள்ளது. முக்கிய எண்ணெய் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் நீர் விநியோகத் தடை -வாடிக்கையாளர்களை கைவிட்டதை ஒப்புக்கொண்ட தலைவர்

  • April 14, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் குளிர்காலத்தில் ஏற்பட்ட கடுமையான நீர் விநியோகத் தடைகளுக்கு பிறகு, வாடிக்கையாளர்களை நிறுவனம் கைவிட்டதாக நீர் நிறுவன தலைவர் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். கென்ட் மற்றும் சசெக்ஸ் பகுதிகளில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுமார் 24,000 வீடுகள் நீர் தடை அல்லது குறைந்த அழுத்த பிரச்சனைகளை எதிர்கொண்டன. பின்னர் மேலும் 30,000 வீடுகள் இதேபோன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து சுற்றுச்சூழல் குழு முன்னிலையில் விசாரிக்கப்பட்ட போது, சவுத் ஈஸ்ட் நீர் நிறுவனத்தின் தலைவர் கிறிஸ் […]

உலகம் செய்தி

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படவில்லை – ஈரான் திட்டவட்டம்

  • April 14, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது குறித்து எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லலையென ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் அரசு ஊடகமான IRNA இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வார இறுதியில் நடைபெற்ற அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் நிறைவடைந்த நிலையில், தற்போதைய நிலவரங்கள் குறித்து மட்டுமே இந்த தகவல்கள் பரிமாறப்பட்டதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே இந்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும் இதுவரை உத்தியோகப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!