அரசியல் இலங்கை செய்தி

வெடுக்குநாறிமலையும் பறிபோகுமா?

  • April 16, 2026
  • 0 Comments

“வெடுக்குநாறிமலையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சுவீகரிக்கப் போகின்றாரார்களா இல்லையா என்பது தொடர்பில் வெளிப்படையாக கூறவேண்டும்.” என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். “வவுனியா – நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் பௌத்தர்களுக்கு உரியது என புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்திருந்தார். எனினும் இதனை அமைச்சர் சந்திரசேகர் மறுத்திருந்தார். இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?” என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே […]

விளையாட்டு

முதலிடத்துக்கு முன்னேறியது RCB!

  • April 16, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 23 ஆவது லீக் ஆட்டத்தில் RCB அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Royal Challengers Bangalore (RCB) அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய Lucknow Super Giants அணி 20 ஓவர்களில் 146 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை RCB விரட்டியது. RCB அணி […]

உலகம் செய்தி

அமைதி பேச்சு: சவூதி இளவரசர், பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை!

  • April 16, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோருக்கிடையில் ஜித்தாவில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மத்திய கிழக்கு பிராந்திய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன. குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் நடைபெறும் அமைதி பேச்சு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானால் மேற்கொள்ளப்படும் இத்தகைய ராஜதந்திர முயற்சிகளை சவூதி இளவரசர் வரவேற்றுள்ளார்.

இலங்கை

09 சீனப் பிரஜைகள் கைது!

  • April 16, 2026
  • 0 Comments

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும் 09 சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களிடமிருந்து சுமார் 24 மில்லியன் ரூபாயிற்கும் அதிக மதிப்புள்ள மின்னணுத் தகவல் தொடர்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் இலங்கையில் தங்கியிருந்து இணையம் வாயிலாக நிதி மோசடிச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை விமான […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு

  • April 16, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் நேற்று (15) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுமிக்கு கடந்த 13ஆம் திகதி வயிற்றுவலியுடன் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையெடுத்து தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அதன் பின்னர், நேற்று அதிகாலை ஒரு மணியளவில் மீண்டும் சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதுடன் வாந்தி எடுத்துள்ளார். நிலைமை மோசமடையவே, அதிகாலை 4:30 மணியளவில் […]

இலங்கை செய்தி

திருமலையில் நீரில் மூழ்கிய சகோதரர்கள் சடலங்களாக மீட்பு!

  • April 15, 2026
  • 0 Comments

நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூன்று சகோதரர்கள் சடலங்களாக மீடக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்துக்கு அருக்கிலேயே இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாலத்துக்கு கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள நீரில் மூழ்கி காணாமல் போனார்கள். சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர். தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று (14) செவ்வாய்கிழமை மாலை சோமதி பாலத்திற்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். இதன்போதே […]

உலகம் செய்தி

ஈரானில் களமிறங்கினார் பாகிஸ்தான் ராணுவ தளபதி!

  • April 15, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று ஈரானுக்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் அமைதி பேச்சுகளை முன்னெடுப்பதற்கு பாகிஸ்தான் மத்தியஸ்தம் வகிக்கின்றது. இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முதல் சுற்று பேச்சு தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் பேச்சை தொடர்வதற்குரிய முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. இதன்ஓர் அங்கமாகவே பாகிஸ்தானைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவினர் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளது. அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட முக்கியமான செய்தியைப் பகிரவும், தோல்வியடைந்த முந்தைய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட ஆலோசனைகளை மேற்கொள்ளவும் […]

உலகம்

முற்றுகை தொடர்ந்தால் கடல்வழி வர்த்தகம் முடங்கும் – ஈரான் சபதம்!

  • April 15, 2026
  • 0 Comments

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால், செங்கடல், ஓமான் வளைகுடா மற்றும் கடல் வழியாக நடைபெறும் வர்த்தகத்தை முடக்குவோம் என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது. ஈரானிய அரசு தொலைக்காட்சியில் வெளியான ஒரு அறிக்கையில், மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தனது முற்றுகையைத் தொடர்ந்தால் மற்றும் “ஈரானின் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்களுக்கு பாதுகாப்பின்மையை உருவாக்கினால்”, அது போர் நிறுத்தத்தை மீறுவதற்கான “ஒரு முன்னுரையாகவும்” அமையும் என்று இராணுவத்தின் மத்திய கட்டளை மையத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். […]

ஐரோப்பா

லண்டனைப் பாதுகாக்க “இரும்புப் பாதுகாப்பு அரண்” தேவை – பாதுகாப்பு ஆலோசகர் கருத்து!

  • April 15, 2026
  • 0 Comments

ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து லண்டனைப் பாதுகாக்க ஒரு “இரும்புப் பாதுகாப்பு அரண்” தேவைப்படலாம் என்று இங்கிலாந்தின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 2018 முதல்  2020 வரை அமைச்சரவைச் செயலாளராக பணியாற்றிய லார்ட் செட்வில் (Lord Sedwill), பெருகிவரும் அபாயகரமான உலகில் பிரித்தானியா தனது பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நமக்கு நிச்சயமாக முறையான வான் பாதுகாப்பு தேவை,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]

ஐரோப்பா

ஐரிஸில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு!

  • April 15, 2026
  • 0 Comments

ஐரிஸில் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு குறித்து விவசாயிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த நிலையில், பிரதான எதிர்கட்சியான சின் ஃபைன் (Sinn Fein) நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. வாக்கெடுப்புக்குச் சற்று முன்பு மாநில அமைச்சர் ஹீலி-ரே,  (Healy-Rae ) தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தார். எரிபொருள் போராட்டங்களைக் கையாண்ட விதம் குறித்து அயர்லாந்து அரசாங்கம் “ஆணவத்துடன்” நடந்துகொண்டதாகவும், விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்த்திருக்க வேண்டும் என்றும் அவர் […]

error: Content is protected !!