உலகம் செய்தி

ட்ரம்பின் கருத்துக்கு ஈரானிய அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பு

  • April 18, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள ஈரான் தொடர்பான கருத்துகள், ஈரானிய அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ட்ரம்ப், ஈரானிடமிருந்து முக்கிய சலுகைகள் பெறப்பட்டதாக கூறியதுடன், அணு திட்டம், ஹோர்முஸ்  நீரிணை மற்றும் பொருளாதார தடைகள் குறித்து பல்வேறு கூற்றுகளை வெளியிட்டார். அவரது கூற்றுகளின்படி, குண்டுவீச்சில் சேதமடைந்த அணு தளங்களில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம், இரு நாடுகளும் இணைந்து அகற்றி அமெரிக்காவிற்கு மாற்றப்படும் என்றும், ஈரான் தனது மண்ணில் யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். […]

ஐரோப்பா

04 நாள் வேலை வாரம் – லண்டனில் பணிப்புறக்கணிப்பில் இறங்கும் தொழிற்சங்கம்!

  • April 18, 2026
  • 0 Comments

நான்கு நாள் வேலை வாரத்தை கண்டித்து லண்டன் சுரங்கப்பாதை ஓட்டுநர்கள்,  24 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் ஏப்ரல் 21 மற்றும் 23 ஆம் திகதிகளில்  இடம்பெறவுள்ளது. லண்டன் போக்குவரத்துத் துறை (TfL)   நான்கு நாள் வேலை வாரத்தை திணிக்க முயற்சிப்பதாக  RMT தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இருப்பினும் இந்த மாற்றங்கள் தன்னார்வமானவை என்றும், ஒப்பந்த வேலை நேரங்களில் எந்தக் குறைப்பும் இருக்காது என்றும் TfL கூறுகிறது. இந்த முன்மொழிவுகள், ரயில் இயக்குபவர்களுக்கு […]

ஐரோப்பா

இஸ்ரேல் மீது பொருளாதார தடை விதிக்கும் பிரித்தானியா!

  • April 18, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நிலங்களை இணைக்கும் இஸ்ரேலின் நகர்வுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கிலாந்தின் எம்பிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். சுமார் 75 எம்பிகள் இணைந்து அவசர நாடாளுமன்றத் தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளனர். ரிச்சர்ட் பர்கனால் (Richard Burgon) முன்வைக்கப்பட்டுள்ள மேற்படி தீர்மானம், பாலஸ்தீன நிலத்தை “அரசு நிலம்” என்று பதிவு செய்வதன் மூலம்  நிலத்தை அபகரிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிக்கிறது. இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவதை […]

உலகம்

எந்த சமரசமும் செய்ய மாட்டோம் – ஈரான் திட்டவட்டம்!

  • April 18, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் புதிய முன்மொழிவுகளை பரிசீலித்து வரும் அதேவேளை பேச்சுவார்த்தைகளில் சமரசம் இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர வழிமுறை இருந்தபோதிலும், தனது நிலைப்பாடு உறுதியாக இருப்பதாக ஈரான் வலியுறுத்தியுள்ளது. தனது பேச்சுவார்த்தைக் குழு “சிறிதளவு சமரசம், பின்வாங்கல் அல்லது மென்மை காட்டாது என்றும்,   தேசத்தின் நலன்களைத் தனது முழு பலத்துடன் பாதுகாக்கும்” என்றும் வலியுறுத்தியுள்ளது.  

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல் 

  • April 18, 2026
  • 0 Comments

  ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற கச்சா எண்ணெய் ஏற்றிய இந்தியக் கொடியேற்றிய கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாக இந்திய அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் “சன்மார் ஹெரால்டு” என அடையாளம் காணப்பட்ட அந்தக் கப்பலும், அதில் இருந்த பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அதே நாளில் சுமார் இரண்டு வர்த்தகக் கப்பல்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா, ஈரானின் தூதுதரை வரவழைத்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். முன்னதாக, […]

உலகம் செய்தி

ஈரான் கடந்த 47 ஆண்டுகளைப் போன்றே  தந்திரமாக செயற்படுகிறது – ட்ரம்ப் கருத்து

  • April 18, 2026
  • 0 Comments

ஈரானுடன் தற்போது சிறந்த முறையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில்  ஈரான் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதேவேளை, ஈரான் கடந்த 47 ஆண்டுகளைப் போன்றே சற்று தந்திரமாக செயற்படுகிறது என்றும் அவர் கூறினார். ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முயற்சிக்கலாம் எனவும், ஆனால் அமெரிக்காவை அச்சுறுத்துவதை அனுமதிக்கமாட்டோம் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஈரான் தொடர்பாக […]

இலங்கை செய்தி

போதைப்பொருட்களுடன் நால்வர் கைது

  • April 18, 2026
  • 0 Comments

கடலில் இருந்து மீட்கப்பட்ட  போதைப்பொருட்களுடன்  இலங்கை கடற்படையால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஆழ்கடலில் மீன்பிடிப் படகொன்றில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்றபோது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக அந்தப் படகு திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. முதற்கட்ட நடைமுறைகளைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். சந்தேக நபர்களின் வயது 24, 36, 46 மற்றும் 48 என்றும், அவர்கள் தேவினுவர பகுதியைச் […]

இந்தியா செய்தி

மோடி, அமித் ஷாவால் ஸ்டாலினை பணியவைக்க முடியாது

  • April 18, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் ஸ்டாலினை மோடியும், அமித் ஷாவும் மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது  என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் திருச்சியில்  கருத்து தெரிவித்த அவர், “ டெல்லியில் தமிழக மக்களின் சிப்பாயாக செயல்படுவேன் என்றும் அவர் கூறினார். திருச்சி துறையூரில் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத், திமுக வேட்பாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு, கதிரவன், கருணைராஜா, சேலம் ஆத்தூர் வேட்பாளர் அர்த்தநாரி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் ‘Yellow Line’ கட்டுப்பாட்டுப் பகுதியை உருவாக்கியது இஸ்ரேல்!

  • April 18, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானில் ‘மஞ்சள் கோடு’ (Yellow Line) என்ற புதிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை உருவாக்கியுள்ளது. காசா பகுதியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பிரிவினையைப் போலவே, இந்த எல்லைக்கோடு லெபனானில் இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான இடைவெளியைத் தீர்மானிக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தாலும், இந்த எல்லையைத் தாண்டி வரும் நபர்கள் அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இராணுவம் எச்சரித்துள்ளது. அண்மையில் இந்த எல்லையை மீறியதாகக் கூறப்படும் ஆயுததாரிகள் […]

ஐரோப்பா செய்தி

லெபனானில் பிரான்ஸ் அமைதிப்படை வீரர் உயிரிழப்பு

  • April 18, 2026
  • 0 Comments

லெபனானின் தென்பகுதியில் இன்று காலை நடந்த தாக்குதலில், சர்வதேச அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பிரெஞ்சு வீரர் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் X தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய நாடுகளின் இடைக்கால அமைதிப்படை பணியில் ஈடுபட்டிருந்த மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பே காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக மக்ரோன் கூறியுள்ளார். இந்நிலையில் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்ய லெபனான் அதிகாரிகள் […]

error: Content is protected !!