இந்தோனேசிய அமைச்சரவை மறுசீரமைப்பில் நீண்டகாலமாக நிதியமைச்சர் பதவி வகித்த ஸ்ரீ முல்யானி நீக்கம்
வன்முறைப் போராட்டங்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் நடந்த கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து, இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ அமைச்சரவையில் திடீர் மாற்றத்தை அறிவித்துள்ளார். இதில், நீண்டகாலமாகப் பதவி வகித்து வந்த நிதியமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாகப் பொருளியல் நிபுணர் பர்பயா யுதி சதேவா புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த அமைச்சரவை மாற்றத்தால் மேலும் நான்கு அமைச்சர் பதவிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், புதிதாக ஹஜ், உம்ரா அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டாக்டர் பர்பயா, 61, […]













