அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: ஆஸ்திரேலியாவுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான $276 மில்லியன் மதிப்பிலான முதல் முக்கிய ஒப்பந்தத்தை பென்டகன் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இந்தத் திட்டத்திற்கான முழு நிதியையும் ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்குகிறது, மேலும் இதற்கான வடிவமைப்புப் பணிகளை ஜெனரல் டைனமிக்ஸ் எலக்ட்ரிக் போட் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. அமெரிக்கக் கடற்படையின் உற்பத்தி வேகம் மந்தமாக இருந்தாலும், இந்த ஒப்பந்தம் திட்டத்தின் முன்னேற்றத்தைக் காட்டுவதாக அதிகாரிகள் கருதுகின்றனர். […]













