இந்தியா

வங்குரோத்து பாதுகாப்பு கோரும் கோ ஃபெர்ஸ்ட் விமான நிறுவனம்!

இந்திய விமான சேவை நிறுவனமான கோ ஃபெர்ஸ்ட்  வங்குரோத்து பாதுகாப்பு கோரியுள்ளது.

இந்தியாவின் தேசிய கம்பனிச் சட்ட தீர்ப்பாயத்திடம் தனது வங்குரோத்து மனுவை கோ பெர்ஸ்ட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

மே 3 முதல் 5 ஆம் திகதிவரையான விமானப் பயணங்களை தான் இரத்துச் செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வர்த்தகர் நுஸ்லி வாடியாவுக்குச் சொந்தமான வாடியா குழுமத்தினால் கோ எயார் என்ற பெயரில் 2005 ஆம் ஆண்டு கோ பெர்ஸ்ட் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்திய அரசாங்க புள்ளிவிபரங்களின்படி கடந்த மார்ச் மாதம் இந்தியாவின் 5 ஆவது மிகப் பெரிய உள்ளூர் விமான சேவையாக கோ பெர்ஸ்ட் விளங்கியது. 6.9 சதவீத சந்தைப் பங்கை கொண்டிருந்தது.

அமெரிக்காவின் விமான என்ஜின் தயாரிப்பு நிறுவனமான பிராட் அன்ட் வைட்னி நிறுவனத்திடமிருந்து வழங்கப்பட்ட விமான என்ஜின்களில் ஏற்பட்ட கோளாறுகள் மற்றும் உதிரி என்ஜின்கள் முறையாக கிடைக்காதமை காரணமாக தனது விமானங்களின் அரைவாசியை தரையிறக்கி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் வங்குரோத்து பாதுகாப்பு அவசியமாகவுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content