மாலத்தீவில் ஸ்கூபா டைவ் சென்ற ஐந்து இத்தாலியர் உயிரிழப்பு!!
மாலத்தீவில் ஸ்கூபா டைவிங் (scuba diving) விபத்தில் ஐந்து இத்தாலியர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோமில் உள்ள வெளியுறவு அமைச்சகம் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த ஐவரும் வாவூ அட்டோலில் சுமார் 50-60 மீட்டர் ஆழத்தில் உள்ள குகைகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது இந்நிலை ஏற்பட்டதாக தெரிவக்கப்படுகிறது.
நேற்றைய தினம் அவர்கள் நீருக்கடியில் மூழ்கச் சென்ற நிலையில் மீண்டும் மேற்பரப்பிற்கு வராததால், தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்கள் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, வலுவான நீரோட்டங்கள் மற்றும் சிக்கலான நீருக்கடியில் உள்ள சுரங்கப்பாதைகளுக்குப் பெயர் பெற்ற குகை அமைப்புகளுக்குள் நுழைய முயன்றபோது, ஆபத்தை எதிர்கொண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.





