செய்தி தமிழ்நாடு

சினிமா இயக்குனரின் மனைவிக்கு கொலை மிரட்டல்

வளசரவாக்கம்,ஓய்.எம்.ஜி.பாபு தெருவை சேர்ந்தவர் ராம்குமார்(33), இவர் சினிமாத்துறையில் இயக்குனராக பணி புரிந்து வருகிறார்.

தற்போது புதுமுக நாயகனை வைத்து படம் ஒன்றை எடுத்து வருகிறார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் தான் சினிமா துறையில் இயக்குனராக இருந்து வரும் நிலையில் இளம் நடிகர்களை நடிக்க வைக்க திரைப்பட்டறை என்ற பெயரில் பயிற்சி பள்ளி நடத்தி வருவதாகவும் தனக்கு மைதிலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக ஒன்றாக வசித்துவருவதாகவும்,

மைதிலிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவரது கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டதால் பிரதிக்சா என்ற மகள் உள்ள நிலையில் கணவர் இறப்புக்கு பின்னர் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறினார்.

இந்த நிலையில் மைதிலியின் குடும்பத்தினர் திருச்சியில் வசித்து வருவதாகவும் அவரது குடும்ப நண்பரான ஜெயராம் பாண்டியன் என்பவர் பாஜக பிரமுகராக இருந்து வருவதாக கூறினார்.

மைதிலி குடும்பத்தினருடன் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக சரிவர பேசாமல் இருந்து வந்ததாகவும் மைதிலி பாஜகவில் சேர்ந்து ஜெயராம் பாண்டியனுடன் பணியாற்றிய நிலையில் மைதிலியுடன் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி வந்ததாகவும் மேலும் செல்போன் மூலம் ஆபாசமாக பேசி தொந்தரவு கொடுத்து வந்ததாகவும்,

மைதிலியின் குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் வாட்ஸ் ஆப் மூலம் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜெயராம் பாண்டியனை தீவிரமாக தேடி வந்த நிலையில் திருச்சியில் பதுங்கி இருந்த ஜெயராம் பாண்டியனை வளசரவாக்கம் போலீசார் இன்று கைது செய்து வளசரவாக்கம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

அப்போது விசாரணையில் இவர் சில பெண்களின் புகைப்படங்களை எடுத்து வைத்து கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது,

மேலும் மைதிலியை மிரட்டி பணம் கேட்டு ஆபாசமாக பேசியது தெரியவந்தது,
இதையடுத்து ஜெயராம் பாண்டியனை கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

(Visited 5 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content