இலங்கை செய்தி

பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபர் கைது

வெசாக் தினத்தன்று வீட்டில் சடங்குகளை செய்து கொண்டிருந்த 47 வயதுடைய பெண்ணை வன்புணர்வு செய்த 27 வயது நபர் வெலிகந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் வெலிகந்த சிங்கபுர பகுதியைச் சேர்ந்தவர்.

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டு வீட்டிற்கு வந்த இந்த இளைஞன், வீட்டில் யாரும் இல்லாததை உணர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அப்போது, ​​பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்த இளைஞனை மடக்கிப் பிடித்ததுடன், இளைஞனின் தந்தை வந்து இளைஞனை மீட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞனும் தந்தையும் வெலிகந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது உள்ளூர் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content