முக்கிய செய்திகள்

22 வயது இந்திய இளைஞனுக்கு அமெரிக்காவில் முக்கிய பதவி வழங்கிய எலான் மஸ்க்

உலகப் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க்கின் செயல்திறன் துறையில் 22 வயது இந்தியப் பொறியாளர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

அமெரிக்க அரசு செயல் திறன் துறையில் 19 முதல் 24 வயதுக்குள்பட்ட ஆறு பொறியாளர்களுக்கு அரசின் முக்கிய அமைப்புகளில் பொறுப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறைந்த வயதில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளி பொறியாளரான ஆகாஷ் போபா, எலான் மஸ்க்கின் அரசாங்க செயல்திறன் துறையால் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

போபா ஒரு யுசி பெர்க்லி பட்டதாரியாவார். ஆகாஷ் போபாவைத் தவிர்த்து மற்ற 5 பொறியாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் எட்வர்ட் கோரிஸ்டைன், லூக் பாரிட்டர், கௌடியர் கோல் கில்லியன், கேவின் கிளிகர் மற்றும் ஈதன் ஷாட்ரான் ஆகியோரும் இடம்பெறுள்ளனர்.

ஆகாஷ் போபா, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இவர் தொழில்நுட்பத் துறைத் தலைவர்களுக்கான மேலாண்மை, தொழில்முனைவோர் மற்றும் தொழில்நுட்பத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக தன்னுடைய லின்கெடின்னில் தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் போபா கடந்த காலங்களில் பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் ஹெட்ஜ் ஃபண்டில் முதலீட்டு பொறியியல் பயிற்சியாளராகவும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா மற்றும் தியேலின் பாலந்திர் டெக்னாலஜிஸில் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

(Visited 26 times, 1 visits today)

SR

About Author

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்