இலங்கை செய்தி

யாழ் ஊடக அமையத்தின் 2023-2024 ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு

யாழ் ஊடக அமைய பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றபோதே புதிய ஆண்டுக்கான நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.

தலைவர் உரை,செயலாளர் உரை பொருளாளர் கணக்கறிக்கை வாசித்தல் என்பன இடம்பெற்று புதிய நிர்வாக தெரிவு யாழ் ஊடக அமைய உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இதன்போது யாழ் ஊடக அமையத்தின் புதிய தலைவராக மூத்த பத்திரிகையாளர் குமாரசாமி செல்வகுமார் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளராக சி.நிதர்சனும் பொருளாளராக க.கம்சனனும்
தெரிவு செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, உப தலைவர் , உப செயலாளர் தெரிவை அடுத்து நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

யாழ். ஊடக அமையமானது, 10 ஆண்டுகளை கடந்து 11ஆவது ஆண்டில் கால் பதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

(Visited 4 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content