ஆஸ்திரேலியா இலங்கை

மற்றுமொரு சோகம்!! அவுஸ்திரேலியாவில் இலங்கை தம்பதி சடலங்களாக மீட்பு..

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் வீதியில் உள்ள வீடு ஒன்றிற்கு முன்னால் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வயோதிப தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

12ஆம் திகதி பிற்பகல் மெல்பேர்ன் மில்லியனர்ஸ்ரோ வீதியில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Doyne Caspersz மற்றும் அவரது மனைவி Marlene Caspersz ஆகியோரே இறந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

70 மற்றும் 80 வயதுக்குட்பட்ட இவர்களது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளிவராத போதிலும், இந்த மரணத்தில் சந்தேகம் இல்லை என பொலிஸார் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இவர்களது மரணத்திற்கு அவுஸ்திரேலியாவில் தற்போது நிலவும் அதிக வெப்ப அலை காரணம் என்றும் கூறப்படுகின்றது.

உயிரிழந்த தம்பதியினர் சுமார் இருபத்தைந்து வருடங்களாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர், அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை இன சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் உப தலைவராகவும் Doyne Caspersz கடமையாற்றியுள்ளார்.

(Visited 13 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content