உலகம்

போர் நிறுத்தத்தின் எதிரொலி – தாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கம்போடிய வீரர்கள் விடுதலை!

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாய்லாந்து இராணுவம் 18 கம்போடிய வீரர்களை இன்று விடுவித்துள்ளது.

தாய்லாந்து மற்றும் கம்போடிய நாடுகளுக்கு இடையே கடந்த 20 நாட்களாக இடம்பெற்ற மோதல் நிலை அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த மோதல் நிலைமை காரணமாக குறைந்தது 101 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரு தரப்பிலும் அரை மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தாய்லாந்து இராணுவத்தின் காவலில் இருந்த கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்புக்காவலில் இருந்தபோது கைதிகள் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் கொள்கைகளின்படி” நடத்தப்பட்டதாக தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்