அமெரிக்க தாக்குதல்களில் ஈரானில் 14 பேர் பலி
ஈரான்மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜூலை 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் ஈரானின் ஐந்து மாகாணங்களைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 78 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மக்கள் தொடர்புத் துறைத் தலைவர் Hossein Kermanpour தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் 47 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




