பொழுதுபோக்கு

அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு டபுள் றீட் : உருவாக்கும் புஷ்பா3 ?

‘புஷ்பா’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ‘புஷ்பா2’ தற்போது உருவாகி வருகிறது.

இதனை அடுத்து ‘புஷ்பா3’ உருவாக்கும் திட்டம் இருப்பதாக அதன் நாயகன் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை நடிகர் அல்லு அர்ஜூஅர்ஜூன் பெற்றார்.

சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த ’புஷ்பா’ படம் பான் இந்தியா அளவில் வசூலிலும் பெரும் வெற்றிப் பெற்று,

கடந்த 2021ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் அடுத்த பாகம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

‘புஷ்பா2’ படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் முதல் லுக் போஸ்டர், கிளிம்ப்ஸ் என படத்தின் அப்டேட்ஸ் அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

தேசிய விருதுகளை வென்ற பின்னர், ‘புஷ்பா2’ படத்தின் பிசினஸ் ஆயிரம் கோடிக்கு விரிவடைந்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரக்கூடிய 74வது பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் ’புஷ்பா’ படம் திரையிடப்படுகிறது. இதில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், ’புஷ்பா’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்தான சூப்பர் அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது, “நிச்சயமாக புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தை எதிர்பார்க்கலாம். இதற்கான ஐடியாவும் வைத்துள்ளோம். இந்த ‘புஷ்பா’ சீரிஸ் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்தமானதாக இருக்கும். ’புஷ்பா1’ படத்தில் பார்த்ததை விட ’புஷ்பா 2’ படத்தில் வித்தியாசமான புஷ்பாவை பார்ப்பீர்கள். அதைவிட பெரிய படமாகவும் இருக்கும்” என்றார்

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content