ஆசியா

ஜப்பானில் நெஞ்சு வலியால் துடித்த நபரை காப்பாற்றிய நாய் – குவியும் பாராட்டு

ஜப்பானில் நெஞ்சு வலி வந்த நபரை காப்பாற்றிய நாய்க்குப் பாராட்டு குவிந்துகொண்டிருக்கிறது.

Koume என்ற 5 வயதுப் பெண் நாய்க்கு உள்ளூர்த் தீயணைப்புத் துறை அதிகாரிகள் பாராட்டு விழா நடத்தி, சான்றிதழ் அளித்து கௌரவித்தனர்.

அந்த நாய் சிபா (Chiba) நகரில் உள்ள குதிரைச் சவாரி மன்றத்தைச் சேர்ந்தது. சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடந்தது. மன்றத்தில் 50 வயதைத் தாண்டிய ஆடவர் ஒருவர் நிலைகுலைந்து விழுந்தார்.

அவருக்கு அருகில் இருந்த கௌமே, விடாமல் குரைக்கத் தொடங்கியது. சற்று நேரத்தில் குரைக்கும் சத்தம் கேட்டுப் பலரும் கூடியதுடன் அவரை காப்பாற்றப்பட்டார்.

கௌமே பொதுவாக அவ்வளவு குரைக்காது; அமைதியாகவே இருக்கும்; அதனால் அது குரைத்தது தங்களுக்கு எச்சரிக்கையாக அமைந்தது என்றார் மன்றத்தின் குதிரைச் சவாரிப் பயிற்றுவிப்பாளர்.

நபரை காப்பாற்றிய நாயையும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்த மன்றத்தின் அதிகாரிகளையும் தீயணைப்புத் துறை பாராட்டியது.

தப்பி ஓடும் குதிரைகள், ஆபத்து நேரும் தருணங்கள் ஆகியவற்றைக் கண்காணிக்க கௌமே போன்ற பெண் நாய்களைத் தொடர்ந்து வைத்துப் பராமரிப்பதாய் மன்றம் சொன்னது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content