ஐரோப்பா

கிரேக்க நாட்டில் உல்லாசத் தீவில் விபரீதம் – பல்லாயிரக் கணக்கான வெளிநாட்டவர்கள் வெளியேற்றம்

கிரேக்க நாட்டின் பிரபல ரோட்ஸ் (Rhodes) உல்லாசத் தீவில் கட்டுப்படுத்த முடியாதவாறு காட்டுத் தீ பரவிவருகின்றது.

இதனால் அங்கிருந்து பல்லாயிரக் கணக்கிலான வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

மத்தியதரைக் கடலில் – துருக்கிக்கு மிக அருகில் -அமைந்துள்ள அழகிய கடற்கரைகள் கொண்ட அந்தத் தீவில் கடும் வெப்ப அனல் காரணமாகத் தீ மூண்டு பரவிவருகிறது.

கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாகத் தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலைவரம் காணப்படுவதால் அங்கு கோடை விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கின்ற உல்லாசப் பயணிகளை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

ஹொட்டேல்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை மூடிவிடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் சில அங்கு தங்கியுள்ள தமது பிரஜைகளை எச்சரித்துள்ளன.

(Visited 13 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content