லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்கள் – பலி எண்ணிக்கை 3,371 ஆக உயர்வு
லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,371 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மார்ச் 2 முதல் நடைபெற்ற தாக்குதல்களில் 10,129 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.
வெள்ளிக்கிழமை மட்டும் தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ச்சியான தாக்குதல்களால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மோதல்களால் நாட்டின் மக்கள்தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர், அதாவது சுமார் 12 லட்சம் பேர், தங்கள் வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




