அறிந்திருக்க வேண்டியவை

பூமியை நோக்கி வரும் அபாயகரமான சிறுகோள்! நாசா வெளியிட்ட தகவல்

சுமார் 890 அடி விட்டம் கொண்ட, அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

2008 OS7 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.41 மணிக்கு நமது கிரகத்தை 1,770,000 மைல் தொலைவில் கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது.

அபாயகரமான அந்த சிறுகோள், சுமார் 890 அடி விட்டம் கொண்டதாகும்.

என்றாலும், அந்த சிறுகோள் பூமியின்மீது மோதும் அபாயம் இல்லை என நாசா கூறியுள்ளது.

Dr Minjae Kim என்னும் அறிவியலாளர் இது குறித்துக் கூறும்போது, இந்த சிறுகோள் பூமிக்கு அருகில் வருவதுபோல் தோன்றினாலும், அது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையாது என்பதால், அதைக்குறித்து அதிகம் கவலைப்படவேண்டியதில்லை என்கிறார்.

நமது சூரிய அமைப்பில், அபாயகரமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ள சுமார் 2,350 சிறுகோள்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.

You cannot copy content of this page

Skip to content