இலங்கை செய்தி

மின் கட்டண உயர்வால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நெருக்கடி

18 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் (பிடிஏ) தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் எரிபொருள் விற்பனை ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இப்பிரச்சினை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் செலவுகள் அதிகரித்து வருவதாகவும், தினசரி விற்பனை குறைந்து வருவதாகவும் நாவுதுன்ன குறிப்பிட்டார்.

ஆனால், எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தியமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் மகிழ்ச்சியளிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது மக்களுக்கு பெரும் சேவையாக அமையும் என்றார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை