செய்தி தமிழ்நாடு

பெரும்பாலான தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது

கர்நாடகாவில் பெரும்பாலான தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது – ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.

தேர்தல் முடிவடைந்ததை முன்னிட்டு இன்று வாக்கு என்னும் பணியானது காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் 121 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இதன் காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கான அதிக வாய்ப்பை பெற்றுள்ளது.

இதனை வரவேற்கும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நகர தலைவர் அருள்ராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி