ஆஸ்திரேலியா விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு – வெளியேற்றப்பட்ட 2 பயணிகள்
ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் இருந்து இந்தோனேசியாவின் பாலி நோக்கி பயணித்த விமானத்தில் 03 பயணிகள் குடிபோதையில் இருந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பின்னர் விமானக் குழுவினர் டார்வினில் அவசரமாக தரையிறக்கி 03 பயணிகளையும் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பிரிஸ்பேனைச் சேர்ந்த 20 வயது இளைஞர்கள் இருவர் மற்றும் 42 வயது நபர் ஒருவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் விமானத்தில் சிகரெட் புகைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த 03 பயணிகளுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)