அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரஜை!
கடந்த ஆண்டு அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புச் செயலாளராக இருந்த கிறிஸ்டி நோமிற்குச் ( Kristi Noem) சொந்தமான கைப் பையை திருடிய குற்றச்சாட்டில் சிலி நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
50 வயதான மரியோ புஸ்டாமான்டே லெய்வாவ (Mario Bustamante Leiva) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், சிறை தண்டனை நிறைவடைந்ததும் நாடு கடத்தப்படுவார் என ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
லெய்வா சட்டவிரோதமாக நாட்டிற்குள் குடிப்பெயர்ந்ததாகவும், பெண்களை குறிவைத்து தனது மோசடியை நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.





