ஐரோப்பா

ரஷ்யாவில் சூறாவளி – பரிதாபமாக உயிரிழந்த 3 சிறுவர்கள் உட்பட 8 பேர்

ரஷ்யாவில் வீசிய சூறாவளியில் 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் Mari El பகுதியில் உள்ள தேசியப் பூங்காவில் Volga ஆற்றோரத்தில் அமைக்கப்பட்ட முகாம் மீது மரங்கள் விழுந்ததில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூறாவளி தாக்கியபோது முகாமில் நூற்றுக்கணக்கானோர் இருந்ததாகவும் அவர்களில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் முகாமில் மீட்கப்பட்டன.

எஞ்சியவர் மருத்துவமனையில் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் 29 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டன.

16 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சுற்றுப்பயணிகள் வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொள்ளவில்லை என்று அரசாங்கம் கூறியது.

முகாமில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content