உலகம் செய்தி

இன்றைய தினம் வானில் ஏற்படவுள்ள மாற்றம்

‘ரிங் ஆஃப் ஃபயர்’ என்று அழைக்கப்படும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்றைய தினம் வானத்தில் தோன்றவுள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலா வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணம் இன்றைய தினம் நிகழ உள்ளது.

இந்த சூரிய கிரகணம் ‘ரிங் ஆஃப் ஃபயர்’ என அழைக்கப்படுகிறது. அதாவது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலா வரும்போது, பூமியில் இருந்து பார்க்கும்போது, நிலா முன்னாள் சென்று சூரியனை மறைக்கிறது. ஆனால், சூரியனின் மேற்பரப்பை நிலாவால் முழுமையாக மறைக்க முடிவதில்லை. இதன் விளைவாக வானத்தில் நெருப்பு வளையம் தோன்றும்.

இந்த ஆண்டு சூரிய கிரகணம் இலங்கை, இந்திய நேரப்படி இன்றைய தினம் இரவு 9.13 மணியளவில் தொடங்கி நாளைய தினம் நள்ளிரவு 3.17 மணியளவில் முடிவடைகிறது.

நெருப்பு வளையம் போன்று தோன்றக்கூடிய கிரகணத்தின் உச்ச நிலை, நள்ளிரவு 12.15 மணிக்கு ஏற்படும். தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை காண இயலும்.

வட அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக், அண்டார்டிக்கா பகுதிகளில் சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை காண இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி இரவு நேரத்தில், இந்த சூரிய கிரகணம் ஏற்படுவதால், இந்தியா, ஆசியாவில் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 13 times, 14 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content