இலங்கை செய்தி

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கைதானவர்களை சிறையில் சந்தித்த சாணக்கியன்

மாவீரர் தினத்தன்று மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள மாணவன் உட்பட நான்கு பேரை பிணையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியிருந்தார்.

இதில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரம் பயிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள நியுட்டன் தனுசாந்த் என்னும் மாணவர் தனக்கு பிணையாவது பெற்றுத்தருமாறும் தான் பரீட்சைக்கு தோற்ற வழியேற்படுத்துமாறும் தன்னிடம் கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

அண்மையில் இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியிருந்த நிலையில் இன்றைய தினம் இது தொடர்பில் ஜனாதிபதி செயலாளரின் கவனத்திற்கும் கொண்டுசென்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content