இலங்கை

வறட்சியின் பிடியில் சிக்கியுள்ள இலங்கை : கவலையில் விவசாயிகள்!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையின் பல பகுதிகளில் கடுமையான வறட்சியான காலநிலை பதிவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் உள்ள சுமார் 6,000 மழைநீர் தொட்டிகள் வறண்டுவிட்டதாக கூறப்படுகிறது.

அவற்றுள் அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அமைந்துள்ள பல ஏரிகளும் அடங்கும்.

இதேவேளை, வறட்சியான காலநிலை காரணமாக உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக உடவலவ நீர்த்தேக்கத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்களுக்கு நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விளைச்சலை போதியளவு பெற்றுக்கொள்ள முடியாது என விவசாயிகள் கவலை வெளிளயி்டுள்ளனர்.

அத்துடன் நீர்மட்டம் குறைவதன் காரணமாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், மின் துண்டிப்பு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content