இந்தியா செய்தி

மத்தியப் பிரதேசத்தில் 55 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – ஒருவர் மரணம்

மத்தியப் பிரதேசத்தின் பர்வானி(Barwani) மாவட்டத்தில் ‘நர்மதா பரிக்ரம'(Narmada Parikrama) யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார், 55 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தூர்(Indore) மற்றும் தார்(Dhar) மாவட்டங்களைச் சேர்ந்த 56 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, பைகூர்(Baigur ) கிராமத்திற்கு அருகே விபத்துக்குள்ளானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களில் 15 பேர் சிகிச்சைக்காக பர்வானி(Barwani) மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், ஏனையோர் கெதியா(Khetia) ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி