உலகம் செய்தி

எல்லை மோதல்களுக்கு மத்தியில் மியான்மர் தூதரை வரவழைத்த வங்கதேசம்

மியான்மர்(Myanmar) மற்றும் வங்காளதேச(Bangladesh) எல்லையில் நிலவும் பதற்றத்தை தொடர்ந்து, டாக்காவிற்கான மியான்மர் தூதர் கியாவ் சோ மோவை(Kyaw Soe Moe) வங்காளதேசம் வரவழைத்துள்ளது.

மியான்மரின் ரக்கைன்(Rakhine) மாநிலத்தில் சண்டை அதிகரித்து வருவதால், வங்காளதேசம் மற்றும் மியான்மர் எல்லையில் சமீபத்தில் வன்முறை அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மியான்மரின் ரக்கைன் மாநிலம் மற்றும் பங்களாதேஷ் எல்லைக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 வயது ஹுசைஃபா அப்னான்(Husayfa Abnan) சிறுமி காயமடைந்துள்ளார்.

பின்னர் திங்களன்று, டெக்னாப்பில்(Teknab) உள்ள வைகாங்(Waikang) எல்லை அருகே கண்ணிவெடி வெடித்ததில் 28 வயது நபர் ஒருவர் தனது காலை இழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மியான்மர் தூதரை அழைத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களை தடுக்க முழுப் பொறுப்பையும் தேவையான நடவடிக்கைகளையும் மியான்மர் எடுக்க வேண்டும் என்று வங்காளதேசம் முறையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி