ஐரோப்பா

ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சரிவு – 05 பேர் உயிரிழப்பு!

ஆஸ்திரிய ஆல்ப்ஸ் (Austrian Alps) மலைத்தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா தலத்திற்கு அருகில் பனிச்சரிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 03 பேர் உயிரிழந்தனர்.

பின்னர் அதற்கு அருகிலுள்ள மற்றொரு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.

இந்த குளிர்காலத்தில், பனிச்சரிவு காரணமாக ஆஸ்திரியாவில் 21 இறப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்