இலங்கை செய்தி

மலேசியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையின் இளம் தம்பதியினர் பலி

மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பிரஜைகள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியாவில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்ததாகக் கூறப்படும் 33 மற்றும் 35 வயதுடைய திருமணமான தம்பதியினர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கோலாலம்பூர் நகரில் மற்றொரு வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், விபத்தின் போது காரில் இருந்த தம்பதியின் மகள் காயமின்றி தப்பியதாக கூறப்படுகின்றது. அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் சடலங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content