ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் அவசர நிலை பிரகடனம்

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படையினரின் எல்லை தாண்டிய தாக்குதல் இரண்டாவது நாளாக தொடர்வதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பிராந்திய ஆளுநர் அலெக்ஸி ஸ்மிர்னோவ், “எதிரி படைகள் பிராந்தியத்திற்குள் வருவதால் ஏற்படும் விளைவுகளை அகற்ற” இந்த நடவடிக்கை அவசியம் என தெரிவித்தார்.

எல்லைப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மற்ற நகரங்களிலிருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக,எல்லையில் இருந்து 10 கிமீ (ஆறு மைல்) தொலைவில் உள்ள சுட்ஜா நகருக்கு அருகே நூற்றுக்கணக்கான துருப்புக்கள் எல்லையைத் தாண்டியதாக மாஸ்கோ கூறியதை அடுத்து உக்ரைன் ஒரு “பெரிய ஆத்திரமூட்டலை” தொடங்குவதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றம் சாட்டினார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி