பொழுதுபோக்கு

“மாவீரன்” திரைப்படம் குறித்து தரமான அப்டேட்!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் மாவீரன் திரைப்படம் குறித்து தரமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

மாவீரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது.

இத்திரைப்படத்தை இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், நடிகர் சுனில், இயக்குநர் மிஸ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய வேடங்க்ளில் நடித்துள்ளனர்.

கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கவந்த அதிதி ஷங்கர், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மாவீரன் படத்தில் வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் பரவியது.

ஆனால், அது வெறும் வதந்தி படப்பிடிப்பு நடந்து வருவதாக சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியின் போது விளக்கம் கொடுத்திருந்தார்.

மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

மாவீரன் திரைப்படம் தெலுங்கு மொழியில் மாவீரடு என்ற பெயரில் உருவாகி வருகின்றது

இத்திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்டார் நடித்த ஜெயிலர் படம் வெளியாகும் என்ற பேச்சு எழுந்ததால், மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுள்ளது.

அடுத்தடுத்த இரண்டு படங்கள் தோல்வியைத் தழுவியதால், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்ததே ஆக வேண்டிய கட்டாயத்தில் சிவகார்த்திகேயன் இருக்கிறார்.

இந்த படத்தை முடித்துவிட்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளர். இப்படத்தைஉலக நாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

இந்தப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மாவீரன் படம் குறித்து அடுத்தடுத்து வெளியாகி வரும் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content