ஜப்பானை தாக்கவுள்ள பாரிய நிலநடுக்கம்!
வடகிழக்குக் கடற்கரைக்கு அப்பால் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த வாரத்தில் “மிகப்பெரிய” நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தலைநகர் டோக்கியோவிலிருந்து 530 கி.மீ (330 மைல்) வடக்கே உள்ள இவாடே மாகாணத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியிருந்ததுடள் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதேநேரம் சுனாமி அலைகள் 80 செ.மீ. உயரம் வரை பதிவாகியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே அடுத்த வாரம் மற்றுமொரு பாரிய நிலநடுக்கம் பதிவாகும் எனவும் அவை பாரிய அலைகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், 8.0 ரிக்டர் அல்லது அதற்கும் அதிகமான அளவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் “சாதாரண காலங்களை விட ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.





