நெதர்லாந்தில் குழந்தைகளுக்கு எமனாக வந்த கார்!
நெதர்லாந்தில் பாடசாலைக்கு சைக்கிளில் சென்ற குழந்தைகள் மீது கார் ஒன்று மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் இன்று பெல்ஜிய எல்லைக்கு அருகிலுள்ள வோகல்வார்டே (Vogelwaarde) கிராமத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது,
இதில் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், 04 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் நெதர்லாந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் விபத்து குறித்த மேலதிக தகவல்கள் விசாரணையின் பின் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




